கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Thursday 27 September 2018

குரு பெயர்ச்சி 2018





 



ஸ்ரீ கோமதி அம்மன் அருள்
ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை600011 +91 8939809978  9884437550  9884472729
இணைய தளம் http://gomathidasan.blogspot.in
 sri gomathiarul@gmail.com
********************************************************
குரு பெயர்ச்சி 2018
ஸ்ரீ குரு பகவான்
 
 

அருள் மிகு    ஆச்சி அம்மன் துணை
--------------------------------------------------------------------
அருள் மிகு ஆச்சி அம்மன்   பாமாலை
கதிரும் அவர் தம் மகனும் கணிதனும் அவர் தம் தந்தையும்
கலைகள் நாயகனும் திருவருள் தேவனும்
மண்ணின் மைந்தனும்மங்கலமான இருநாகங்களூம்
போற்றும் ஆவுடையே என் அம்மையே
காலசக்கரத்தின் அரசியே கற்பகமே எங்கள் கோமதியே நின் திருவடி பணிந்த இவ் சிறியேன் நின் அடியேனுக்கு காலநாயகர்கள் தீவினைகள் அருளாமல் என்றும் திருவருள் நல்குமாறு
ஆணையிடுவாயே என் அம்மையே  ஆச்சியே
(
ஜெயவீரபத்திரன்)
*********************************************************************




நிகழூம் சுவஸ்தி ஶ்ரீ விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 18ந்தேதி ஆங்கிலம்  4/10/2018  வியாழக்கிழமை தேய்பிறை ஏகாதசி திதி ஆயில்யம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு  10.40 மணியளவில் குருபகவான் துலாராசியிலிருந்து விருச்சிகராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் இதை மூன்னிட்டு 5-10-2018 வெள்ளிக்கிழமை காலை 7.00மணியளவில் குரு பகவானுக்கு விசேஷ பூஜைகளூம் ஹோமங்களூம் நடைப்பெறும் இதை கண்ணுரும் பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு குருபகவான் திருவருள் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம் கட்டணம் 101-/மட்டும்

     
துலாம் மகரம் மீனம் ரிஷபம் கடகம் ராசிகளூக்கு
அதிக நல்ல  பலன்கள் தரும் காலம் ஆகும்
மிதுனம் கன்னி தனுர் ராசிகார்களூக்கு
மத்திம பலன் தரும் காலம் ஆகும்
மேஷம் சிம்மம் விருச்சிகம் கும்பம் ராசிகளூக்கு சுமாரான பலன்களை தரும் காலம் ஆகும்


பின்குறிப்பு
மேற்படி இவை பொதுபலன்கள் தான் ஆகும்
தெசா புக்தி ஏற்ப பலன்கள் கூடுதல் குறைதல் ஏற்படும் இறைவன் திருவடி உறுதியுடன் போற்றுபவர்களூக்கு கிரகங்கள் நன்மையே செய்யும் நலங்களும் வளங்களூம் பெருகும்
என்றும் இறைப்பணியில் திருமதி ஜெயலட்சுமி பாலசுப்ரமணியன்

முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று








     பலன்கள்
துலாம் மகரம் மீனம் ரிஷபம் கடகம் ராசிகளூக்கு நற்பலன்கள் தரும் காலம் ஆகும் (வருடம் மூழுவதும் நற்பலன்கள் பெற வியாழக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு நல்எண்ணை விளக்கு ஏற்ற வேண்டும் மாதம்தோறும் தங்கள் ஜன்ம நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்  முடிந்தால் அவரவர் வசதி ஏற்ப கோவிலிக்கு  நல்எண்ணை வாங்கி தரலாம்
தயிர் சாதம் எளியோர்களூக்கும் பசுமாட்டுக்கும் எருதுக்கும் தரலாம் கொண்டைகடலை சுண்டல் செய்து பிரதோஷம் அன்று கோவிலில் வினியோகம் செய்லாம்
மகிழம் பூவால் குருவுக்கு அர்ச்சனை செய்யலாம்
வயது முதிர்ந்தோர்க்கு மஞ்சள் நிற  வேஸ்டி துண்டு ,புடவை ஜாக்கெட் பிட் வஸ்திர தானம் செய்யலாம் இறைவனுக்கும் வழங்கலாம் (பருத்தி துணியே நன்மை தரும்)

மிதுனம் கன்னி தனுர் ராசிகார்களூக்கு மத்திம
பலன் தரும் காலம் ஆகும்
பரிகாரங்கள்
ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் மூருகனுக்கும் ஆஞ்னேயர்க்கும் விளக்கு ஏற்றவும்தங்கள் ஜன்ம நட்சத்திரம் அன்று குருபகவானுக்கும் சனீஸ்வர பகவானுக்கும் அர்ச்சனை செய்து கொள்ளவும்எலுமிச்சை பழ சாதம் தயிர் சாதம் வினியோகம் செய்யவும்மாததோறும்  அனுஷ நட்சத்திரம் அன்று சிவபெருமானை தரிசனம்  செய்து கோளாறு திருப்பதிகம் படிக்கவும் (அதிக நற்பலன்கள் ஏற்படும்)
நீலநிறவஸ்திரமும் சிகப்பு வஸ்திரமும் மூருகனுக்கும் ஆஞ்னியேர்க்கும் வழங்கலாம் எளியோர்களூக்கும் வஸ்திர தானம் வழங்கலாம்

மேஷம் சிம்மம் விருச்சிகம் கும்பம் ராசிகளூக்கு சுமாரான பலன்களை தரும் காலம் ஆகும்
பரிகாரம்
ரிஷபாடமூர்த்தி ,(உமா மகேஸ்வரர் ) வியாழக்கிழமை   அன்றும்
லட்சமிநாராயணர் வெள்ளிக்கிழமை அன்றும்
லட்சுமிநருஸிம்மர் புதன்கிழமை அன்றும்
சக்தி கணபதி ,திங்கட்கிழமை அன்றும் ஸர்ப்பகணபதி சனிக்கிழமை அன்றும்  தரிசனங்கள் நன்மை தரும்
இந்த நாள்களில் விளக்கு ஏற்றுதல் அன்னம் இடுதல் இறைவனை தரிசனம் செய்வது நலம் தரும்
சுவாதி அன்று லட்சமி நருஸிம்மருக்கு பானகமும் வினியோகம் செய்வது நலம் தரும்
கிருத்திகை அன்று மூருகனுக்கு மோர் நிவேதனம்   செய்வது மங்களம் தரும் ஜன்ம நட்சத்திரம் அன்று
பூசணிக்காய் அல்வா செய்து குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வினியோகம் செய்ய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கவுரவம் ஏற்படும் கடன் தீரும்

பின்குறிப்பு
மேற்படி இவை பொதுபலன்கள் தான் ஆகும்
தெசா புக்தி ஏற்ப பலன்கள் கூடுதல் குறைதல் ஏற்படும் இறைவன் திருவடி உறுதியுடன் போற்றுபவர்களூக்கு கிரகங்கள் நன்மையே செய்யும் நலங்களும் வளங்களூம் பெருகும்
என்றும் இறைப்பணியில் திருமதி ஜெயலட்சுமி பாலசுப்ரமணியன்

முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று

(குறிப்பு கதிர் சூர்யபகவான் அவர் தம் மகன் சனிபகவான்
கணிதன் புதபகவான் அவர் தம் தந்தை சந்திரபகவான்
கலைகள் நாயகன் சுக்ரபகவான் திருவருள் தேவன் குருபகவான்
மண்ணின் மைந்தன் அங்காகரக பகவான்
மங்கலமான இரு நாகங்கள் இராகு பகவான் கேது பகவான் )




 

ஸ்ரீ குரு பகவான்

No comments:

Post a Comment

Flag Counter

Followers