கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Saturday, 30 November 2024

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி 32 வது ஆண்டு. லட்ச ஆவர்த்திமூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்

                                                                          

அருள் மிகு ஆச்சி அம்மன்  அருள்

ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை

 

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

ஸ்ரீகோமதியம்மன் கோவில்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை600011 M+91 8939809978  9884437550  9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

EMAIL.sri gomathiarul@gmail.com

*****************************************************

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி

32 வது ஆண்டுலட்ச ஆவர்த்திமூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்

அருள் வேண்டும் அய்யா கணபதி

ஞான பொருள்  வேண்டும்  அய்யா கணபதி

திறம்  வேண்டும்  அய்யா  கணபதி -எமக்கு

தீமை  அணுகா  மனம்  வேண்டும்  அய்யா கணபதி

(தவத்திரு  கோமதிதாச  ஸ்வாமிகள்)

 

 

என்று தவத்திரு  கோமதிதாச  ஸ்வாமிகள்  வேண்டிய  படி

நாம்  நலமாக   வளமாக வாழ என்றும்

 கணபதி  அருள வேண்டும்

நன்மை தீமை  அறியும்  ஞானத்தை 

 கணபதி நமக்கு  வரமாக  தர   வேண்டும்

தர்ம  காரியங்கள்  செய்யும் திறம் 

கணபதி  அருள   வேண்டும்   

தீமை  மேல்  பற்று கொள்ளா மனம்   

நாடாமல் கணபதி காத்து அருள  வேண்டும்

என்று  மகா கணபதியை  பிராத்தனை  செய்து  கொள்வோம்

நிகழும்  ஸ்வஸ்தி  ஸ்ரீ குரோதி வருஷம்  மார்கழி மாதம்  9ந் தேதி ஆங்கிலம்  24-12-2024 செவ்வாய்க்கிழமை  தேய்பிறை நவமி திதி  ஹஸ்தம்  நட்சத்திரம் சித்த யோகம் கூடிய  சுப யோக சுப  தினத்தில்  காலை 7.30 மணிக்கு மேல் குரு ஹோரையில்  

ஸ்ரீ மகாகணபதிக்கு 32 வது ,ஆண்டு லட்சஆவர்த்தி மூலமந்திர ஜபம் ஹோமம்  பூஜை ஆரம்பம்.

மேற்கண்ட கணபதி ஹோமம் திரு தவத்திரு கோமதி தாச சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று இது  32 வது ஆண்டு ஆகும்

 இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேறோம் 

24-12-2024 செவ்வாய்க்கிழமை முதல்

01-01-2025 புதன் கிழமை  வரை 

(மார்கழி 9 முதல் மார்கழி 17 வரை )

நிகழ்ச்சி நிரல்

24-12-2022  மார்கழி 9 காலை  7.30 மணி அளவில்

மங்கள ஹேரம்ப கணபதி  பூஜை

கலச ஸ்தாபனம் , கலச பூஜை கணபதி ஹோமம்

மஹா தீபாரதனை  பிரசாத விநியோகம்

 

பிரி தி  தினம் 25-12-2024 முதல்  31-12-2024 வரை

 காலை 8.00 மணி அளவில்  

மஹா  கணபதி  ஹோமம் ஆரம்பம்

பிரி தி  தினம் 24-12-2024 முதல்  31-12-2024 வரை

மாலை 6.௦௦ மணிஅளவில்

லட்சார்ச்சனை நடைப்பெறும்

 

01-01-2025 புதன் கிழமை    காலை 7.15   மணி அளவில் மஹாகணபதி ஹோமம் ஆரம்பம்

காலை 10.30 மணி அளவில் மஹா பூர்ணாஹுதி 

விஷேஷ அபிஷேகம் அர்ச்சனை 

மஹா  தீபாராதனை  பிரசாத வினியோகம்

பகல் 12.00 மணி அளவில் அன்னதானம் 

 

கடந்த முறை ஹோமத்தில் பொருள் உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தந்த

கோமதி அடியவர்களுக்கு கணபதி அருளால்

நீண்ட ஆயுள்  குறைவற்ற ஆரோக்கியம் வளரும் நிதி

 புகழ் பெற்ற அடியவர்கள் போல் பக்தி  வாழ்வியில் ஞானம்   அற வழியில் வைராக்கியம் கணபதியின் திருவருளினால் எல்லோர்க்கும்  கிடைக்கட்டும்

 

இப்படிக்கு என்றும் இறை பணியில்

B. ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்

நிர்வாக  டிரஸ்டி

ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு) 

சென்னை-600011

வேள்வி கட்டணம் ருபாய்- 450.00  ரூபாய்

 

 

 

 

FOR DONATIONS PLEASE SEND  TO

 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

BANK: City Union Bank Ltd A/C NO 5001 0101 377 5917
PERAMBUR BRANCH IFSC CODE- CIUB0000261
GPAY MOBILE NO NO +91 89394 94745

PUNJAB NATIONAL BANK A\C NO 1587 000 1000 33284   

IFSC CODE PUNB 0158700 T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011

DEAR DEVOTTES IF YOU SEND MONEY ON LINE TRANSFER  OR MONEY ORDER, CHEQUE

 PLEASE MENTION YOUR MOBILE NO

AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS

TO +918939809978 KOVIL WHATSAPP NO +918939809978

கீழ் கண்ட திரவியங்கள்  கொண்டு ஹோமம்  நடைப்பெற  உள்ளது

1 அவல்  2-நெல்பொரி 3 -ஒடச்சக்கடலை 4- நாட்டுச்சக்கரை

5 நெய்  6 தேன்  7-அருகம்புல்  8- கரும்பு துண்டு 9-மோதகம்

10-அப்பம் 11-கொப்பரை  தேங்காய் 12- விளாம்பழம்

13-வில்வ பழம் -14- மாதுளைப்பழம் 15-வலம்புரி

16-இடம்புரி -17-அரச சமித்து  18- வன்னி சமித்து

19-சத்துமாவு 20-எள் உருண்டை -21-கற்கண்டு

22-முந்திரி -23 திராட்சை -24-தாமரை -25-வில்வம்

26-வன்னி இலை  -27-மகிழும் பூ  28-வெண் தாமரை

29-நவகிரஹ சமித்து  30-செவ்வாழை 31-ருத்ர ஜடை

32-தாமரை மணி 33-கஸ்தூரி  மஞ்சள் 34-ஹவிஸ்

35-வெண்கடுகு 36-வெள்ளை எள்

 (பின் குறிப்பு )

நிர்வாக வசதிக்காக  நிகழ்ச்சிகள் மாறுதலுக்கு  உட்பட்டவை

அருள் மிகு ஆச்சி அம்மன் பாமாலை

 பித்தனின் நாயகியே நின் திருவடி மேல் சித்தம்

உள்ள எளியேனுக்கு 
பத்தோடு ஆறும் வளங்களை  அருள்வாயே

பரம தயாபரியே பவதாரிணியே
நித்தம் நின் திருவருளினால் திருவடி  போற்றும்

 எளியேனுக்கு கருணை புரிவாயே
பத்திரை மாற்று தங்கமே  பவளமே பாரோர் போற்றும்

அற்புதமே அருள்வாயே என் அம்மை ஆச்சியே 
  (
ஜெயவீரபத்திரன்)

 

 

முடியா  முதலே  என் கருத்து  முடியும் வண்ணம்  முன்னி

No comments:

Post a Comment

Flag Counter

Followers