உ
ஆக்கம் s. ஜெயவீரபத்ரன்
எடுக்கும் செயல்கள்
அனைத்தும் வெற்றி பெற
தடுக்கும் நம் தீவினை அகன்று மறைந்திட
பக்தியுடன் இரு கரம் கூப்பி -கணபதி
என்னும் நாமம் ஓதுவோம்
வாடினேன் வருந்தினேன் வாழ் நாள்
எல்லாம்
தேடினேன் நின் திரு அருள்
பெற காலம் எல்லாம்
நாடினேன் நின் திருவடியை
நல் வாழ்வு பெற
நிலை இல்லா வாழ்வின் மேல் நேசம் வைத்து
நின் திருவடி மறந்தேன் பார் -மறை புகழும்
அன்னையே இந்த மாந்தனை கடைத்தேற
கருணை உடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே
3
நின் திருவடி மறந்தேன் பார் -மறை புகழும்
அன்னையே இந்த மாந்தனை கடைத்தேற
கருணை உடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே
3
உன் அருள் இன்றி ஒரு செயல் நடவாது
என்று உணராத வருக்கு - உன்
செயலே எல்லாம் என்று உணர்ந்து - பின்பு
குறையில்லா மாமணியே கோகுலத்தின் நாயகியே
மறை புகழும் நாயகியே என் மரகதமே
இணை இல்லா உன் திருவடி சரண அடைந்தேன்
பரிவுடன் என்னை காப்பாய் ஆச்சியே என் அம்மையே
5
தீராத தீ வினை உண்டோ அம்மா -நின்
திருவடி சரண் அடைந்த பின்பு -
பாராது இருப்பது நின்கருணைக்கு அழகு ஆகுமோ
மாறாத அன்புடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே
5

தீராத தீ வினை உண்டோ அம்மா -நின்
திருவடி சரண் அடைந்த பின்பு -
பாராது இருப்பது நின்கருணைக்கு அழகு ஆகுமோ
மாறாத அன்புடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே
அறம் வழியில் பொருள் சேர்த்தவர் காண்பது அரிது
மறை சொன்ன வழியில் வாழ்ந்தவர் காண்பது அரிது
குறை இல்லா உயிரனம் காண்பது அரிது -உன்
அருள் இன்றி உன்னை அடைந்தவர் ஏது?
7
மறை சொன்ன வழியில் வாழ்ந்தவர் காண்பது அரிது
குறை இல்லா உயிரனம் காண்பது அரிது -உன்
அருள் இன்றி உன்னை அடைந்தவர் ஏது?

நாடிய பொருள் கை கூடும் நல் வளங்கள் பெருகும்
தேடும் செல்வங்கள் திசை எங்கும் வந்து சேரும்
நாடும் வீடும் நலம் பெற நாடுவோம்
என் அம்மை ஆச்சியின் திரு பாதங்களை
8
தேடும் செல்வங்கள் திசை எங்கும் வந்து சேரும்
நாடும் வீடும் நலம் பெற நாடுவோம்
என் அம்மை ஆச்சியின் திரு பாதங்களை
8
விதியை வெல்லும் வழி உண்டே கேளீர் -
கோமதி என்னும் என் அன்னையின் திரு நாமத்தை
நம் மதியினில் ஏற்றி தினமும் போற்றிட
விதியை வெல்வீர் பாரீர்
9 
கோமதி என்னும் என் அன்னையின் திரு நாமத்தை
நம் மதியினில் ஏற்றி தினமும் போற்றிட
விதியை வெல்வீர் பாரீர்
அருளும் பொருளும் அனைத்து அருளும்
துன்ப இருள் தொலைந்து மறையும்
தூயவள் என் அன்னை கோமதி
திருப் பாதம் பற்றிடும் அன்பருக்கு
10
துன்ப இருள் தொலைந்து மறையும்
தூயவள் என் அன்னை கோமதி
திருப் பாதம் பற்றிடும் அன்பருக்கு
10

நஞ்சு உண்ட நாயகனை காத்த நாயகியே -இந்த
பிஞ்சு மனம் படும் வேதனை அறியாயோ
தஞ்சம் என்று அடைந்த பின்பு -தாயே
தய புரிய தாமதம் ஏனோ என் அம்மையே ஆச்சியே
11

இருளும் ஒளியும் போல் என் வாழ்வில்
துன்பமும் துயரமும் சேர்ந்தே உள்ளது
தாயே நின் அருள் ஒளியால் என் துன்ப இருள்
கல்லினில் இருக்கும் தேரைக்கு அருள் புரியம் தேவியே
கற்பகமே காளியே மாரியே என் கண்கண்ட தெய்வமே
என்னையும் கருணையுடன் காப்பாய் அம்மையே
உலகாளும் உமையே என் அம்மை ஆச்சியே
13
13

அறியாமையாலும் அகந்தையாலும் நின்திருவடி
அனுதினம் துதிக்க மறந்து அல்லலுற்றேன் ஆதி சக்தியே
அருள் கூர்ந்து இந்த அடியவனை காத்து அருள்வாய்
ஆதி லக்ஷ்மியே என் அம்மைஆச்சியே
14
14

(பாமாலைகள் வளரும்)
© 2014 ஸ்ரீ கோமதி தியான பூமி
© 2014 ஸ்ரீ கோமதி தியான பூமி
(c)copy right reserved sri gomathi dhiyanna bhoomi
ஆக்கம் s.ஜெய வீர பத்ரன்
© 2014 sri gomathi dhiyanna bhoomi
http://www.myfreecopyright.com/register/emailValidation/276f334ddb3f36c2bb2f6dc8dfecaa53









































No comments:
Post a Comment